Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
About AABCS
 
எ.எ.பி.சி.எஸ்
  • தகுதியுள்ள திட்டத்தொகையில் 35 % மூலதன மானியம் (உச்சவரம்பு ரூ. 1.5 கோடி)
  • திட்டத்தொகை நிலம், கட்டடம், இயந்திர தளவாடங்கள் மற்றும் கருவிகள், ஆய்வு மற்றும் மதிப்பீட்டுக் கருவிகள், கணினி ஆகியவற்றின் விலை மதிப்பை உள்ளடக்கியது. நிலமதிப்பு மொத்த திட்டத் தொகையில் 20% ஐ மிகலாகாது. கட்டிட மதிப்பு மொத்த திட்டத்தொகையில் 25 %க்குள் இருக்க வேண்டும். ஒரு செயல்பாட்டுச் சுழற்சிக்குத் (One Operating cycle) தேவைப்படும் நடைமுறை மூலதனமும், மொத்த இயந்திர தளவாடங்கள் / கருவிகள் மதிப்பில் 25% என்ற வரம்புக்குட்பட்டு திட்டத் தொகையாகக் கணக்கில் கொள்ளப்படும். திட்டச் செயல்பாடுகளுடன் ஒருங்கிணைந்த பகுதியாக அமையும் வாகனங்களின் மதிப்பும் கணக்கில் கொள்ளப்படும்.
  • இயந்திர தளவாடங்கள் / கருவிகள் வாங்கப் பெறப்பட்ட பருவக் கடனுக்கு, கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுதும் (அதிகபட்சம் 10 ஆண்டுகள்) 6% வட்டி மானியம். வட்டி மானியம் முன்கூட்டியே வங்கிகளுக்கு பட்டுவாடா செய்யப்படும்.
  • நடைமுறை மூலதனத்துக்காகப் பெறப்பட்ட கடனுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை வட்டி மானியம்.
  • இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்கள் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத பிற அரசு / அரசல்லாத நிறுவனங்களில் மானியம் பெறத் தடையில்லை.
  • பட்டியல் வகுப்பு / பட்டியல் பழங்குடி இனத் தனிநபர்கள், முழுமையாகப் பட்டியல் வகுப்பு / பட்டியல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களால் உடைமை கொண்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்பெற இயலும்.
  • புதிய நிறுவனங்கள் மற்றும் இயங்கும் நிறுவனங்களின் விரிவாக்க முனைப்புகளுக்கு உதவி கோரலாம்.
  • வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழான திட்டத்தொகை வரம்புக்கு மேற்பட்ட வாணிக / விற்பனைத் தொழில் திட்டங்கள் பயன்பெறலாம்.
  • பயனாளிகளுக்கான உச்ச வயது வரம்பு 55
  • குறைந்தபட்ச கல்வித் தகுதி ஏதுமில்லை.
  • பயன் பெற விழைவோர் விண்ணப்பிக்க msmeonline.tn.gov.in